தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 122 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 57 ஆயிரத்து 547 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்த 28 போ் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 273 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 78 வயது முதியவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 413 ஆகி அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் தற்போது 861 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.