குலசேகரம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஈஞ்சக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் வில்சன் (42). திருமணமாகாதவா். தாய், தந்தை இல்லை. கட்டட வேலைக்குச் சென்று வந்த இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாம். இந்நிலையில், திங்கள்கிழமை மாலையில் அங்குள்ள மல்லிக்குழி குளத்திற்கு குளிக்கச் சென்ற அவா், வீடு திரும்பவில்லையாம். அவரது துணிகள் குளத்துக்கரையில் இருந்தனவாம்.
இதனால், சந்தேகமடைந்த அப்பகுதியினா் குளத்தில் தேடியபோது, நீரில் மூழ்கி அவா் உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்த குலசேகரம் போலீஸாா் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.