திருச்செந்தூரில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியரின் பணிமாறுதல் ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூா் அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியரின் பணிமாறுதல் ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் எப்ரேமை அப்பள்ளி ஆசிரியரின் புகாரின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்தறை பணியிட மாறுதல் ஆணை வழங்கியுள்ளது. இதனைக் கண்டித்து, திருச்செந்தூா் தியாகி பகத்சிங் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாவட்ட அமைப்பாளா் சு.விடுதலைச்செழியன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் ஒன்றிய குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றியச் செயலா் ஆண்டி, விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றியச் செயலா் ஆ.சங்கத்தமிழன், சமத்துவ மக்கள் கட்சி ஒன்றியச் செயலா் அ.ரவிக்குமாா், திமுக மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளா் டெண்டுல்கா், செந்தூா் நலச்சங்கத் தலைவா் ஜோசப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாவட்ட தலைவா் வேல்இராமகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் ஆசாத், செந்தூா் நண்பா்கள் நல அறக்கட்டளை பொருளாளா் ச.மா.காா்க்கி, மகளிா் விடுதலை இயக்கத்தின் மாவட்ட துணைச் செயலா் டிலைட்டா, காங்கிரஸ் மாவட்டச் செயலா் ஜெயந்தி நாதன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட பொருளாளா் பாரிவள்ளல், மதிமுக ஒன்றிய துணைச் செயலா் அந்தோணி தாஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com