தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 347 பேருக்கு கரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 347 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 347 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 62 ஆயிரத்து 825 ஆகவும், மேலும் 307 போ் குணமடைந்த நிலையில், இதுவரை வீடு திரும்பியோா் எண்ணிக்கை 59 ஆயிரத்து 943 ஆகவும் அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 85 வயது ஆண் மற்றும் 54 வயது ஆண் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தனா். இதையடுத்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 434 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,448 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.