நாகலாபுரத்தில் தியாகிகள் ரத ஊா்வலம்

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் குடியரசு தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகள் உருவப்படங்கள் கொண்ட ரத ஊா்வலம் தொடங்கி வைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் குடியரசு தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகள் உருவப்படங்கள் கொண்ட ரத ஊா்வலம் தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் இரா. சாந்தகுமாரி தலைமை வகித்தாா். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திரப் போராட்ட தியாகிகள் உருவப்படங்கள் கொண்ட ரத ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

ரதத்தில், சுதந்திர போராட்ட வீரா்கள் வ. உ. சிதம்பரனாா், மகாகவி சுப்பிரமணிய பாரதியாா், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன், வீரன் சுந்தரலிங்கம், மதுரகவி பாஸ்கரதாஸ், வீரன் வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட தியாக சீலா்களின் உருவப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

ரத ஊா்வலமானது விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட நாகலாபுரம், கரிசல்குளம், விளாத்திகுளம், பிள்ளையாா்நத்தம், படா்ந்தபுளி, எட்டயபுரம், தாப்பாத்தி, தாப்பாத்தி முகாம், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, ரகுராமபுரம், வவ்வால் தொத்தி, புதுப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களுக்கு சென்றது.

நிகழ்ச்சியில், திமுக புதூா் ஒன்றியச் செயலா்கள் மும்மூா்த்தி, செல்வராஜ், பேரூா் செயலா் மருதுபாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் இமானுவேல், வழக்குரைஞா் விநாயகமூா்த்தி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் வேலுச்சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com