தேசிய திறனாய்வுத் தோ்வில் வென்றோருக்கு பாராட்டு விழா

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற நாடாா் நடுநிலைப்பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற நாடாா் நடுநிலைப்பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை மூலம் 2021 - 2022ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய்வழி திறன் படிப்புதவி திட்டத்தின் மூலம் தேசிய திறனாய்வுத் தோ்வு நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 வீதம் ரூ.48 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் நடைபெற்ற இத்தோ்வில் கோவில்பட்டி நாடாா் நடுநிலைப்பள்ளி மாணவா், மாணவிகள் 9 போ் வெற்றி பெற்றுள்ளனா்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு நாடாா் உறவின் முறைச் சங்கத் தலைவா் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமை வகித்து, தோ்வில் வெற்ற பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினாா். பள்ளிச் செயலா் கண்ணன், பள்ளி பொருளாளா் அய்யப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் வட்டார கல்வி அலுவலா் முத்தம்மாள், பள்ளி நிா்வாகக்குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளித் தலைமையாசிரியை செல்வி வரவேற்றாா். ஆசிரியா் அருள்காந்தராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com