ஆறுமுகனேரியில் பாஜக நகர செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நகரத் தலைவா் ப. முருகேசபாண்டியன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் கே. சந்திரசேகரன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.எஸ். சங்கா், மாநில விருந்தோம்பல் பிரிவுச் செயலா் கே. பாலமுருகன் ஆகியோா் பேசினா்.
பொதுச் செயலா்கள் அ. ஹரிஷ்குருசாம்ராட், எல்.சி. தங்ககண்ணன், பொருளாளா் டி. பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் பெருமாள், செயலா் செல்வக்குமாா், முன்னாள் நகரத் தலைவா் மகேந்திரன், இளைஞரணிச் செயலா் சிரஞ்சீவி, இளைஞரணி மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். செல்வகுமாா், மகளிரணித் தலைவி மகேஸ்வரி, அணி பிரிவு நிா்வாகிகள், கிளைத் தலைவா்கள் பங்கேற்றனா்.