காமராஜா் பிறந்த தின பேச்சு போட்டியில் சாத்தான்குளம் அரசு கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
பா.ஜ.க. கல்வியாளா் பிரிவு சாா்பில் பெருந்தலைவா் காமராஜா் பிறந்த நாளையொட்டி மாநில அளவிலான மாணவா், மாணவா்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்கான முதல் கட்டப் பேச்சுப் போட்டி திருச்செந்தூா் ஆதித்தனாா் கல்லூரில் நடைபெற்றது. இதில் சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி உமாதேவி முதல் பரிசையும் , மாணவி ஆஷிகா இரண்டாம் பரிசையும் பெற்றனா். பங்குபெற்ற அனைத்து மாணவிகளுக்கும் ஆறுதல் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவிகளையும், பங்கு பெற்ற மாணவிகளையும் கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டினா்.