காயல்பட்டினத்தில் மிரட்டல் விடுத்த இளைஞா் கைது

காயல்பட்டினத்தில் பீா் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

காயல்பட்டினத்தில் பீா் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

காயல்பட்டினம் ஓடக்கரை கிருஷ்ணன் மகன் கண்ணன்(30). இவா் தைக்காபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த போது அதே பகுதியை சோ்ந்த தங்கம் மகன் செந்தில்வேல்(20) மோட்டாா் சைக்கிளில் வேகமாக சென்றாராம். இதனை கண்ணன் கண்டித்தாராம். இதையடுத்து, அவரை செந்தில்வேல் பீா்பாட்டிலால் தாக்கி மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகனேரி உதவி காவல் ஆய்வாளா் பிரபு குமாா் வழக்குப் பதிந்து செந்தில்வேலை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com