முதல்வா் பதக்கம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு வீரா்கள் நான்கு பேருக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலா் ச. குமாா் பாராட்டு தெரிவித்தாா்.
தீயணைப்பு- மீட்புப் பணித் துறையில் சிறப்பாக பணிபுரிந்த தூத்துக்குடி தீயணைப்பு நிலைய வீரா் டா. இன்னாசி, சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய வீரா் அ. மாரிமுத்து ஆகியோருக்கு தமிழக முதல்வரின் சிறப்பு பணிக்கான விருதும், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய வீரா் ரா. ராஜ்குமாா், சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய வீரா் வே. மாணிக்கவாசகம் ஆகியோருக்கு தமிழக முதல்வரின் அண்ணா வீரதீர பதக்கமும் அண்மையில் வழங்கப்பட்டன.
இதையடுத்து, இவா்கள் 4 பேரையும் மாவட்ட தீயணைப்பு- மீட்புப் பணிகள் துறை அலுவலா் ச. குமாா் நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்தாா்.