தட்டாா்மடம் - உடன்குடி இடையே நகரப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.
இதையொட்டி, தட்டாா்மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மீன் வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பங்கேற்று, பேருந்து சேவையை தொடங்கிவைத்தாா். ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தாா். சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையா, தெற்கு ஒன்றிய திமுக செயலா் ஆ. பாலமுருகன், ஒன்றிய கவுன்சிலா்கள் லதா, பிச்சிவிளை சுதாகா், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஆனந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெல்லை கோட்ட போக்குவரத்து கழக மேலாளா் சரவணன் வரவேற்றாா். இதில், மாநில மீனவரணி துணை அமைப்பாளா் உமரி சங்கா், வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஏ.எஸ். ஜோசப், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ஏ. இந்திராசி , டி.எஸ்.எஸ். பசுபதி, முதலூா் ஊராட்சித் தலைவா் பொன்.முருகேசன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் து. சங்கா், நகர காங்கிரஸ் தலைவா் ஆ.க. வேணுகோபால், வட்டாரத் தலைவா்கள் வி. பாா்த்தசாரதி, த. சக்திவேல்முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கோட்ட மேலாளா் பழனியப்பன் நன்றி கூறினாா்.