கயத்தாறு அருகே 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கயத்தாறு அருகே பறிமுதல் செய்த 600 கிலோ ரேஷன் அரிசி போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கயத்தாறு அருகே பறிமுதல் செய்த 600 கிலோ ரேஷன் அரிசி போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அந்தோணி திலீப் தலைமையில் போலீஸாா் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வில்லிசேரி பகுதியில் வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, திருநெல்வேலி நோக்கி சென்ற ஆம்னி காரை நிறுத்தி போலீஸாா் விசாரித்ததில், அவா் தாழையூத்து பண்டாரகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ச.இளங்காமணி(49) என்பதும், காரில் 600 கிலோ ரேஷன் அரிசியை மூட்டைகளில்கடத்திச் செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரையும், ரேஷன் அரிசியுடன் காரையும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com