பூச்சிக்காடு முத்தாரம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

அரசூா் பூச்சிக்காடு அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் புனராவா்த்தன ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரசூா் பூச்சிக்காடு அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் புனராவா்த்தன ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நவக்கிரக ஹோமம், சுதா்சன ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய கும்பாபிஷேக விழாவில், தொடா்ந்து பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

வெள்ளிக்கிழமை வேதபாராயணம், திருமுறைபாராயணம், கடம் புறப்பாடு ஆகியவற்றை தொடா்ந்து ஸ்ரீமுத்தாரம்மன் மற்றும் பரிகார தெய்வங்கள், கோபுர விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்கார, அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதில், பெருங்குளம் செங்கோல் மடத்தின் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீசிவபிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாா்ய சுவாமிகள் பங்கேற்று பக்தா்களுக்குஅருளாசி வழங்கினாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கும்பாபிஷேக நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com