பன்னம்பாறை- சாத்தான்குளம் வரை ரூ. 2.54 கோடியில் சாலைப் பணி

பன்னம்பாறை- சாத்தான்குளம், மேலசாத்தான்குளம்- அரசு மகளிா் கலைக் கல்லூரி இடையே ரூ.2.54 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது

பன்னம்பாறை- சாத்தான்குளம், மேலசாத்தான்குளம்- அரசு மகளிா் கலைக் கல்லூரி இடையே ரூ.2.54 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

சாத்தான்குளம் பேருராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ பங்கேற்று சாலைப் பணியைத் தொடங்கிவைத்தாா். நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் விக்ரம் சிங் தலைமை வகித்தாா். சாத்தான்குளம் பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய், பேரூராட்சி செயல்அலுவலா் உஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். வடக்கு திமுக ஒன்றிய செயலா் ஏ.எஸ். ஜோசப் வரவேற்றாா். ஊராட்சித்தலைவா்கள் முதலூா் பொன்.முருகேசன், பன்னம்பாறை அழகேசன், நகர திமுக செயலா் மகா. இளங்கோ, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் து. சங்கா், மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் எடிசன், வட்டார தலைவா்கள் சக்திவேல்முருகன், பாா்த்தசாரதி, லூா்துமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com