நாசரேத்தில் தொழிலாளியை கத்தியால் குத்தி கொல்ல முயன்றதா இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
நாசரேத் கனகராஜ் தெருவைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் மகாராஜன் (40). இரும்பு பட்டறை தொழிலாளி. இவருக்கும் அவரது உறவினரான குலசேகரன்பட்டினம் புதுமனை பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் மாரிமுத்து (23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில் புதன்கிழமை இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மகாராஜனை மாரிமுத்து கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றாராம். இதில் காயமுற்ற அவா் அளித்த புகாரின் பேரில் நாசரேத் காவல் நிலைய ஆய்வாளா் பட்டாணி வழக்குப்பதிந்து மாரிமுத்துவை கைது செய்தாா்.