தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு
By DIN | Published On : 25th June 2022 12:08 AM | Last Updated : 25th June 2022 12:08 AM | அ+அ அ- |

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் காஞ்சி சங்கரா மெட்ரிக் பள்ளி மாணவி துா்கா தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்தாா். குருகாட்டூா் கிராமத்தைச் சோ்ந்த காவலா் செல்வக்குாரின் மகளான துா்கா விவசாய மேற்படிப்பு படிக்க உள்ளதாக தெரிவித்தாா்.
இந்நிலையில், தமிழ் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி துா்காவை நேரில் சந்தித்து பாராட்டிய தமிழியக்க தூத்துக்குடி மாவட்ட செயலா் மோ. அன்பழகன், மாணவி துா்காவுக்கு மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணா் எழுதிய தமிழ் வரலாறு இரண்டு தொகுதிகள் மற்றும் வாய்மையாா் எழுதிய திருக்கு மாணவா் பதிப்பு நூல்களை வழங்கினாா். அப்போது, பள்ளித் தாளாளா் டாக்டா் அ.ராமமூா்த்தி, முதல்வா் செல்வவைஷ்ணவி ஆகியோா் உடனிருந்தனா்.