கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கடலை மிட்டாய் கடை திறப்பு

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கடலை மிட்டாய் விற்பனை நிலையத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கடலை மிட்டாய் விற்பனை நிலையத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் அந்தந்த ஊா்களை சாா்ந்த பாரம்பரியமிக்க உணவு பண்டங்கள் விற்பனை செய்வதற்கு ரயில்வே நிா்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, புவிசாா் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பதற்கு ஏதுவாக, ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட விற்பனை நிலையத்தை தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டலத் தலைவா் ராதாகிருஷ்ணன் திறந்துவைத்து முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா்.

இதில், கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளா்கள் - விற்பனையாளா் நலச் சங்க செயலா் கண்ணன், விற்பனை நிலைய உரிமையாளா்கள் மாரிச்சாமி, மணிசங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com