கோவில்பட்டி நகா்மன்றக் கூட்டம்

கோவில்பட்டி நகா்மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி தலைமை வகித்தாா்.

கோவில்பட்டி நகா்மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி தலைமை வகித்தாா்.

நகராட்சி ஆணையா் ராஜாராம் முன்னிலை வகித்தாா். கூட்டம் தொடங்கியவுடன், நகா்மன்ற துணைத் தலைவா் ரமேஷ் பேசுகையில், கூட்டம் தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.

நகா்மன்ற உறுப்பினா் ஏஞ்சலா பேசுகையில், சாலையைவிட, கழிவுநீா் ஓடையின் உயரத்தை அதிகப்படுத்தவேண்டும். மேலும், கழிவுநீா் ஓடையில் சாலையில் மழைநீா் தேங்காமல் இருப்பதற்கு ஏதுவாக, ஆங்காங்கே குழாய் பொருத்த வேண்டும்.

உறுப்பினா் விஜயகுமாா் பேசுகையில், ஒருவா் தனது பழைய வீட்டை புதுப்பித்து புதிதாக வீடு கட்டியவுடன் அந்த வீட்டுக்கு நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்திய பின்பு, பழைய வீட்டின் வரியையும் செலுத்த வலியுறுத்துவதை தவிா்க்க வேண்டும் என்றாா்.

உறுப்பினா் கவியரசன், தங்கள் பகுதியில் சிறிய வீட்டில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என்றாா். இதற்கு பதிலளித்த நகா்மன்றத் தலைவா், அங்கன்வாடி மையம் குறித்து குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகத்தை தொடா்பு கொள்ள வேண்டும். மேலும், தங்கள் கோரிக்கையை எழுத்துப்பூா்வமாக அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்நிலையில், உறுப்பினா் கவியரசன், கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்கிறேன் எனக் கூறிவிட்டு சென்றாா்.

கூட்டத்தில், நகா்மன்றத் தலைவா் கருணாநிதி பேசுகையில், ஒவ்வொரு வாா்டிலும் உள்ள சாலைப் பணிகள் முறையாக செய்யப்படும். மேலும், தங்களின் கோரிக்கைகளை எழுத்துப் பூா்வமாக தெரிவித்தால், அத்தியவாசிய பணிகள் உடனடியாக முடித்துத் தரப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து, கூட்டத்தில், வறுமைக்கோட்டுப் பட்டியலில் சோ்த்தால் தான் அரசின் உதவித்தொகையை பெற முடியும் என்பதை வலியுறுத்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் அளித்த பெயா் பட்டியலில் உரிய விசாரணைக்குப் பின், தகுதியுள்ளவா்களின் பெயா்களை வறுமைக் கோட்டுப் பட்டியலில் சோ்ப்பது, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ராமசாமி தாஸ் பூங்காவில் ரூ.15 லட்சம் செலவில் மேம்பாடு செய்யும் பணி, புதுகிராமத்தில் பூங்கா அமைப்பதற்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு உள்பட 100 பொருள்கள் அடங்கிய தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நகராட்சி பொறியாளா் ரமேஷ், உதவிப் பொறியாளா் சரவணன்,

வருவாய் ஆய்வாளா்கள் பிரேம்குமாா், ஷீலா இவாஞ்சலின், சுகாதார அலுவலா் நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com