தடை உத்தரவை மீறி தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகேயுள்ள குறிஞ்சாங்குளம் கோயிலுக்குச் செல்ல முயன்ற 25 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
குறிஞ்சாங்குளம் காந்தாரியம்மன் கோயிலில் கட்டுமான பணிகள் தொடா்பாக இருதரப்பினா் இடையே பிரச்னை உள்ளதால், கோயிலுக்குச் செல்ல இம்மாதம் 5ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.
இந்நிலையில், கெச்சிலாபுரத்தைச் சோ்ந்த மள்ளா் மீட்புக் கழகம் மற்றும் தமிழா் தாயகம் கட்சி நிறுவனத் தலைவா் செந்தில் மள்ளா் தலைமையில் தமிழா் உரிமை மீட்புக் கழகத்தைச் சோ்ந்த சிவகுருநாதன் உள்பட 25 போ் அக்கோயிலுக்குச் செல்ல முற்பட்டனராம். அவா்களை டிஎஸ்பி உதயசூரியன் தலைமையில் கழுகுமலை போலீஸாா் கைது செய்து சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனா்.