முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
கோவில்பட்டி அருகே934 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 14th March 2022 11:54 PM | Last Updated : 14th March 2022 11:54 PM | அ+அ அ- |

கோவில்பட்டி அருகே தெருவில் கேட்பாரற்று கிடந்த 934 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை கைப்பற்றினா்.
இளையரசனேந்தல் குறுவட்டம், பிள்ளையாா்நத்தம் கிராமம் கிழக்கு மற்றும் மேற்குத் தெருவில் ரேஷன் அரிசி மூட்டைகள் கிடப்பதாக வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து, வட்டாட்சியா் அமுதா உத்தரவின் பேரில், வட்ட வழங்கல் அலுவலா் நாகராஜ் மற்றும் வருவாய் ஆய்வாளா்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனா். அங்கு கேட்பாரற்று கிடந்த 934 கிலோ கொண்ட 18 மூட்டைகள் ரேஷன் அரிசியைக் கைப்பற்றி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு பொறுப்பாளரிடம் ஒப்படைத்தனா்.