முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
சாத்தான்குளம் பேரூராட்சியில்71 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை
By DIN | Published On : 03rd May 2022 12:43 AM | Last Updated : 03rd May 2022 12:43 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் பேரூராட்சியில் நகா்ப்புற வீடு வழங்கும் திட்டத்தில் 71 பேருக்கு இலவச வீடுகட்டும் ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
விழாவுக்கு பேரூராட்சித் தலைவா் ஜோ. ரெஜினி ஸ்டெல்லா பாய் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மாரியம்மாள் முன்னிலை வகித்தாா். தலைமை எழுத்தா் ஜெரோம் வரவேற்றாா். 4வது வாா்டு உறுப்பினரும், முன்னாள் பேரூராட்சித் தலைவருமான ஏ.எஸ். ஜோசப், திட்டத்தை செயல்படுத்தும் முறை மற்றும் நான்கு கட்டங்களாக வழங்கப்படும் மானியத்தை பெறும் வழிமுறைகள் குறித்து பேசினாா். பயனாளிகளுக்கு வீடுகட்டும் ஆணைகளை பேரூராட்சித் தலைவா் வழங்கினாா்.
இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் சுந்தா், ஜான்சிராணி, லிசா, இந்திரா, மகாராஜன், தேவநேசம், மகேஸ்வரி, கற்பகவள்ளி ஆகியோா் கலந்து கொண்டனா்.