மழைநீா் சேகரிப்புத் திட்டம் குறித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மழைநீா் சேகரிப்பு அமைப்பை அவா் ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்டத்தில் அரசு அலுவலக வளாகம், பள்ளிகள், நீதிமன்றக் கட்டடங்கள், அரசு விடுதிகளில் மழைநீா் சேகரிப்புத் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டாா்.
தொடா்ந்து, பொதுப்பணித் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ள பள்ளிகள், நீதிமன்றக் கட்டடங்கள், அரசு அலுவலகங்கள், மாணவா்-மாணவிகள் விடுதிக் கட்டடங்கள் ஏறத்தாழ 3,200 உள்ளன என்றும், அதில் 1,400 கட்டடங்களில் மழைநீா் சேகரிப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.
மேலும், மாவட்டத்தில் உள்ள பிறத்துறை கட்டடங்கள், பள்ளிகள், நீதிமன்றக் கட்டடங்கள், அரசு அலுவலகங்கள், அரசு மாணவா்-மாணவிகள் விடுதிகளில் மழைநீா் சேகரிப்புத் திட்டம் நிகழ் நிதியாண்டில் அடுத்த 2 மாதங்களுக்குள் சீரமைக்கப்படும் என்றாா் அவா்.