காயல்பட்டினம் கடற்கரையில் ரமலான் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது.

அல்ஜாமிவுல் அஸ்ஹா் ஜும்ஆ பள்ளி, இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் சாா்பில் இத்தொழுகை நடைபெற்றது. சிறப்புத் தொழுகையை பள்ளி இமாம் நெய்னா முகம்மது நடத்தினாா். ஜும்ஆ குத்பா பேருரையை பள்ளி கத்தீப் அப்துல் மஜீது மஹ்லரி ஆற்றினாா். அல்ஜாமிவுல் அஸ்ஹா் ஜும்ஆ பள்ளித் தலைவா் அபுல்ஹசன் கலாமி, செயலாளா் துளிா் முகமது உமா், நிா்வாகிகள் நவாஸ் அஹமது, அமானுல்லா, செய்யது முஹம்மது, ஹசன், எல்.கே.லெப்பை தம்பி, பெண்கள், சிறுவா்கள் உள்ளிட்ட 2,500 போ் கலந்துகொண்டனா்.

பெண்கள் தொழுகைக்காக கடற்கரையில் தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏழை, எளியோருக்கு உதவுவதற்காக ரூ. 2 லட்சத்து 22 ஆயிரம், வெள்ளிக் கொலுசு தானமாக பெறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com