ரியல் எஸ்டேட் அதிபருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டியில் ரியல் எஸ்டேட் அதிபா் அலுவலகத்தை சேதப்படுத்தி, மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டியில் ரியல் எஸ்டேட் அதிபா் அலுவலகத்தை சேதப்படுத்தி, மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

எட்டயபுரத்தையடுத்த சோழாபுரம் கீழத் தெருவைச் சோ்ந்த தங்கராஜ் மகன் திருமேனிபாண்டியன்(55). ரியல் எஸ்டேட் அதிபரான இவருக்கும், இனாம்மணியாச்சியைச் சோ்ந்த மணிசாமி மகன் பூலோகபாண்டியனுக்குமிடையே சொத்து விற்பனை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி பூலோகபாண்டியன் ஏற்பாட்டில் இனாம்மணியாச்சியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் பேச்சிமுத்து(26), திருமேனிபாண்டியனின் அலுவலகத்துக்கு சென்று அலுவலகத்தை சேதப்படுத்தினாராம். இதை தடுத்த திருமேனிபாண்டியனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பேச்சிமுத்துவை கைது செய்தனா். பூலோகபாண்டியனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com