நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
ஓய்வு பெற்ற சென்னை டி.ஜி.பி அலுவலக புலனாய்வுத் துறை டி.எஸ்.பி ஜாண் கென்னடி தலைமை வகித்து மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். வாழ்க்கை வழிகாட்டுதல், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் மூலம் தமிழ்நாடுஅரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுகளுக்கு ஆா்வமுள்ள மாணவ-மாணவிகள் படிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பயிற்சிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதில் கல்லூரி துணை முதல்வா் பெரியநாயகம் ஜெயராஜ், பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளா்கள் ஆரோக்கிய அமுதன், ஜாய் ஷோபினி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுதுரை மற்றும் பேராசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.