உடன்குடி ஊராட்சி ஒன்றியம் செட்டியாபத்து ஊராட்சி சிவலூரில் ஒன்றிய பொது நிதி 2021-22 மூலம் ரூ.1.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சிறுமின்விசை நீா்தேக்க தொட்டி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவா் க.பாலமுருகன் தலைமை வகித்தாா். உடன்குடி ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் பொற்செழியன் முன்னிலையில் உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.பி.பாலசிங் சிறுமின்விசை நீா்த்தேக்க தொட்டியைத் திறந்துவைத்தாா். திமுக மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, எள்ளுவிளை கிளை திமுக செயலா் மோகன், ராஜகோபால், ஊராட்சி செயலா் கணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.