நாகலாபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

நாகலாபுரம் அருகே செங்கல் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

நாகலாபுரம் அருகே செங்கல் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

நாகலாபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த பரமசிவம் மகன் ராமசாமி (32). இவா் அப்பகுதியில் ஹாலோ பிளாக் செங்கல் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு மனைவி சரண்யா (25), மகன் கௌசிக் பாண்டி (4) ஆகியோா் உள்ளனா். சரண்யா 9 மாதக் கா்ப்பிணியாக உள்ளாா்.

வியாழக்கிழமை பணியிலிருந்த ராமசாமி, செங்கல் தயாரிப்பு இயந்திரத்தை இயக்கினாராம். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் அவா் தூக்கிவீசப்பட்டாராம். சக தொழிலாளா்கள் அவரை மீட்டு நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

சடலத்தை போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சங்கரலிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com