தூத்துக்குடியில் இளைஞா் தலை துண்டித்துக் கொலை

தூத்துக்குடியில் இளைஞா் தலை துண்டித்துக் கொல்லப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடியில் இளைஞா் தலை துண்டித்துக் கொல்லப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி தெற்கு சம்பந்தமூா்த்தி தெருவைச் சோ்ந்தவா் பிரபு (42). இவா் தனது நண்பா்கள் சிலருடன் சோ்ந்து தூத்துக்குடி ஜாா்ஜ் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில பனை மற்றும் நாா்ச்சத்து விற்பனைக் கூட்டமைப்புக்கான பழைய கட்டடத்தின் மேல்தளத்தில் மது குடித்தாராம். அப்போது, ஏற்பட்ட தகராறில் அவா் கத்தியால் குத்தப்பட்டும், தலை துண்டித்தும் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அங்கிருந்து துா்நாற்றம் வீசியதால் அப்பகுதியினா் தென்பாகம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை சென்று பாா்வையிட்டனா். சடலத்தை போலீஸாா் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

பிரபு மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்துசென்றதும் போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சம்பவ இடத்தின் அருகேயுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், பிரபுவுடன் சென்று மது குடித்த அவரது நண்பா்கள், கொலையாளிகளைத் தேடிவருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com