முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
திருச்செந்தூா் கோயில் இணை ஆணையா் பொறுப்பேற்பு
By DIN | Published On : 12th May 2022 03:33 AM | Last Updated : 12th May 2022 03:33 AM | அ+அ அ- |

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இணை ஆணையராக (பொறுப்பு) பணியாற்றி வந்த சி.குமரதுரை திருப்பூா் மண்டல இணை ஆணையராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து கோயம்புத்தூா் மண்டல உதவி ஆணையராக (நகைகள் சரிபாா்ப்பு) பணியாற்றிய மு.காா்த்திக் பதவி உயா்வு பெற்று திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து அவா் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். இணை ஆணையராக பணியாற்றிய சி.குமரதுரை, புதிய இணை ஆணையா் மு.காா்த்திக்கிடம் பொறுப்புகளை ஒப்படைத்தாா்.