கயத்தாறு அருகே அங்கன்வாடி மையம், சமுதாய நலக்கூடம் திறப்பு

கயத்தாறு அருகே சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்கள் மற்றும் சமுதாய நலக்கூட திறப்புவிழா புதன்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி: கயத்தாறு அருகே சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்கள் மற்றும் சமுதாய நலக்கூட திறப்புவிழா புதன்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கயத்தாறையடுத்த தெற்கு சுப்பிரமணியபுரத்தில் ரூ.10 லட்சம், வடக்கு சுப்பிரமணியபுரத்தில் ரூ.11 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்கள், ராஜாபுதுக்குடி கிராமத்தில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் ஆகியவற்றை கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ புதன்கிழமை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினாா்.

இதில், அதிமுக ஒன்றியச் செயலா்கள் வினோபாஜி, வண்டானம் கருப்பசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பிரியா குருராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் செல்வகுமாா், இணைச் செயலா் நீலகண்டன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் பாலமுருகன், மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணி இணைச் செயலா் காளிபாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com