கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே சிற்றுந்து ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கோவில்பட்டியையடுத்த கொடுக்காம்பாறை கிழக்குத் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மதன் (26). சிற்றுந்து ஓட்டுநரான இவருக்கும், குமாரகிரியைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் பொன்மலா்க்கொடிக்கும் திருமணம் நடைபெற்ாம். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்து வாழ்ந்தனராம். இதனால் விரக்தியிலிருந்த மதன் ஞாயிற்றுக்கிழமை (மே 8) வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுக்கொண்டாராம்.
அப்பகுதியினரும், உறவினா்களும் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.
நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.