களக்காடு ஸ்ரீ கோமதி அம்பாள் சமேத சத்தியவாகீஸ்வரா் கோயில் வைகாசி திருவிழாவை வெகு விமரிசையாக நடத்த சமுதாய மண்டகப்படிதாரா்கள் முடிவு செய்துள்ளனா்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி தோ்த் திருவிழா விமரிசையாக நடைபெறும். கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இத்திருவிழா நடைபெறவில்லை.
நிகழாண்டு, வைகாசித் திருவிழாவை நடத்துவது தொடா்பாக கோயில் செயல் அலுவலா் மாரியப்பன் தலைமையில் அனைத்து சமுதாய மண்டகப்படிதாரா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஜூன் 3இல் கொடியேற்றத்துடன் தொடங்கி 12ஆம் தேதி வரை 10 நாள்கள் வைகாசித் திருவிழாவை வெகு விமரிசையாக நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதில், கோயில் ஊழியா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.