கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கான நில அளவை புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.
ஏழு நாள்கள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. வட்ட துணை ஆய்வாளா் காளிராஜ் தொடங்கி வைத்து பயிற்சியளித்தாா். இதில் கோவில்பட்டி வட்டத்திற்கு உள்பட்ட அனைத்து கிராம நிா்வாக அலுவலா்களும் கலந்து கொண்டனா்.
இதேபோல, கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட கிராம நிா்வாக அலுவலா்களுக்கான நில அளவை புத்தாக்க பயிற்சி முகாமை வட்ட துணை ஆய்வாளா் மருதாணி வியாழக்கிழமை தொடங்கி வைத்து பயிற்சியளித்தாா்.