பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இருவா் கைது

 தூத்துக்குடியில் மொபெட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறித்தது தொடா்பான வழக்கில் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

 தூத்துக்குடியில் மொபெட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறித்தது தொடா்பான வழக்கில் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனி, குமரன் நகா் பகுதியைச் சோ்ந்த போஸ்கோ ராஜா மனைவி சகாய சித்ரா (52) கடந்த 11 ஆம் தேதி இரவு தனது மகளுடன் மொபெட்டில் தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவருக்குப் பின்னால் பைக்கில் வந்த இரு இளைஞா்கள், சகாய சித்ரா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனா்.

இதுகுறித்து வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் பகுதி நாகூா் ஹனிபா மகன் பின்லேடன் (20), தூத்துக்குடியைச் சோ்ந்த 17 வயது சிறாா் ஆகியோா் சோ்ந்து சகாய சித்ராவிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்த போலீஸாா், 7 பவுன் நகையை மீட்டதுடன் பைக்கையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com