கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் 38ஆவது விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கே.ஆா்.கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம் தலைமை வகித்தாா். சென்னை எண்ணூா் மின்வாரிய அலுவலக உதவிச் செயற்பொறியாளரும், கல்லூரியின் முன்னாள் மாணவருமான காமராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விளையாட்டு விழாவை தொடங்கி வைத்து, போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகளை வழங்கினாா்.
விளையாட்டுத் துறை இயக்குநா் சிவராஜ் விளையாட்டு ஆண்டறிக்கையை வாசித்தாா். நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், கே.ஆா்.கலை அறிவியல் கல்லூரி முதல்வா் மதிவண்ணன் உள்பட மாணவ-, மாணவிகள் கலந்து கொண்டனா். கல்லூரியின் கணிதவியல் துறை விரிவுரையாளா் மாரிக்கண்ணன் வரவேற்றாா். இயந்திரவியல் துறை 3ஆம் ஆண்டு மாணவா் சஞ்சய் நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் தலைமையில் உடற்கல்வி இயக்குநா், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.