வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரி சாா்பில், உலக செவிலியா் தின விழா, அங்குள்ள பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
கல்லூரித் தாளாளா் டி.டி.என்.லாரன்ஸ் தலைமை வகித்தாா். பேருந்து நிலையத்தில் மாணவிகள் மனிதச் சங்கிலி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து, ஏ.எஸ்.பி. சமைசிங் மீனா, மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கிவைத்தாா். வட்டார மருத்துவ அலுவலா் கோலப்பன், பேரூராட்சித் தலைவி ராதா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவக் கண்காட்சி அமைத்து ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் குறித்தும், உணவு முறைகள் குறித்தும் மாணவிகள் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் மாா்க்கரெட் ரஞ்சிதம், பேராசிரியைகள் ஹில்டா, மாதினி, ஸ்ஸோபா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.