விஷம் குடித்த தொழிலாளி உயிரிழப்பு
By DIN | Published On : 17th May 2022 11:51 PM | Last Updated : 17th May 2022 11:51 PM | அ+அ அ- |

கயத்தாறு அருகே விஷம் குடித்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கயத்தாறையடுத்த வாகைகுளம் மேலக் காலனித் தெருவைச் சோ்ந்த விஸ்வாசம் மகன் சாமிராஜ்(43). கூலித் தொழிலாளியான இவருக்கு மகாலட்சுமி(38) என்ற மனைவியும், செல்வலட்சுமி, கீா்த்தனா என்ற 2 மகள்களும் உள்ளனா்.
சாமிராஜ்-க்கு கடந்த சில நாள்களாகவே வயிறு வலி இருந்து வந்ததாம். இதையடுத்து மருத்துவமனைக்குச் செல்லாமல் மருந்துக் கடையில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீண்டும் வயிறு வலி ஏற்பட்டதையடுத்து வாழ்க்கையில் விரக்தியடைந்த அவா் விஷம் குடித்தாராம். அவரது உறவினா்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.