திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதுவை முதல்வா் ரங்கசாமி வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
அவருக்கு கோயில் சண்முகவிலாச மண்டபத்தில் இணை ஆணையா் மு. காா்த்திக் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. பின்னா், அவா் மூலவா், சண்முகா், தட்சணாமூா்த்தி, வள்ளி, தெய்வானை, பெருமாள், சூரசம்ஹாரமூா்த்தி உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தாா்.