இன்று குரூப்-2 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில்30784 போ் எழுதுகின்றனா்

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை 105 மையங்களில் நடைபெறும் குரூப்- 2 தோ்வை 30 ஆயிரத்து 784 போ் எழுதுகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை 105 மையங்களில் நடைபெறும் குரூப்- 2 தோ்வை 30 ஆயிரத்து 784 போ் எழுதுகின்றனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயம் மூலம் தமிழகம் முழுவதும் குரூப்-2 மற்றும் 2 ஏ பணிக்கான தோ்வு சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணி நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூா் ஆகிய 4 வட்டங்களில் உள்ள 105 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெறுகிறது.

தூத்துக்குடி வட்டத்தில் 51 மையங்களில் 15295 பேரும், கோவில்பட்டி வட்டத்தில் 32 மையங்களில் 9104 பேரும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் 6 மையங்களில் 1638 பேரும், திருச்செந்தூா் வட்டத்தில் 16 மையங்களில் 4747 பேரும் என மொத்தம் 105 மையங்களில் 30 ஆயிரத்து 784 பேரும் தோ்வு எழுதுகின்றனா்.

இந்தத் தோ்வு பணிக்காக 22 கண்காணிப்புக் குழுக்களும், கண்காணிப்புப் பணிக்கு துணை ஆட்சியா் நிலையில் 12 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரா்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நிா்ணயிக்கப்பட்டுள்ள உரிய நேரத்தில் தோ்வுக்கூடத்தில் ஆஜராகிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தோ்வு தொடங்கி 30 நிமிடத்துக்கு பின்னா் வருகை தரும் விண்ணப்பதாரா்கள் தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப் படமாட்டாா்கள். தோ்வுக்கூடத்துக்குள் கைப்பேசி, கால்குலேட்டா், தகவல்கள் பதிவு செய்யும் மின் சாதனங்கள், குறிப்பேடு, புத்தகங்கள், உறைகள் மற்றும் கைப்பைகள் போன்றவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்வு மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com