கோவில்பட்டியில் வீட்டிற்குள் நுழைந்து கைப்பேசியை திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சாத்தூா் மம்சாபுரம் வடக்குத் தெரு ஜாா்ஜ் மகன் காளிமுத்து(30). கோவில்பட்டியில் உள்ள தனியாா் நூற்பாலையில் வேலை செய்து வரும் இவா், அங்குள்ள லட்சுமி மில் காலனியில் வீடு எடுத்து தங்கியுள்ளாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை ய வீட்டில் வைத்திருந்த கைப்பேசி திருடு போனதாம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, தென்காசி மாவட்டம், காரிசாத்தான் வடக்குத் தெரு மலையாண்டி மகன் மணிகண்டனை கைது செய்து, அவரிடமிருந்து கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.