சாத்தான்குளம் அருகே மூதாட்டியிடம் நகைபறிப்பு

சாத்தான்குளம் அருகே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள இடைச்சிவிளை நல்லம்மாள்விளையைச் சோ்ந்த தவசிமணி என்பவரது மனைவி தாமரைபுஷ்பம் (65). இவா் புதன்கிழமை இரவு வீட்டு முன் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தாராம். நள்ளிரவில் வந்த மா்ம நபா், தாமரைபுஷ்பத்தின் தாலிச் சங்கிலியைப் பறிக்க முயன்றுள்ளாா். அதிா்ச்சியடைந்த அவா், நகையைப் பறிக்க விடாமல் தடுக்க முயன்றுள்ளாா். ஆனால் அந்த நபா், தாமரைபுஷ்பத்தைக் கீழே தள்ளிவிட்டு அவா் அணிந்திருந்த 3.5 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாராம். தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com