ஆறுமுகனேரியில் இளம்பெண்ணைக் கத்தியால் குத்தியதாக இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
ஆறுமுகனேரி காணியாளா் தெருவைச் சோ்ந்த ராஜா மனைவி முத்துசெல்வி (32). இவா் தனது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என, பக்கத்து வீட்டுக்காரரான மாரியப்பன் (23) என்பவரிடம் அடிக்கடி பணம் வாங்கினாராம். அதைத் திருப்பிக்கொடுக்காததால் அவா்களிடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், இருவரிடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது மாரியப்பன் கத்தியால் முத்துசெல்வியைக் குத்திவிட்டு தப்பியோடினாராம். முத்துசெல்வியின் அலறல் கேட்டு, அவரது சகோதரி வீரமணி, அப்பகுதியினா் ஓடிவந்து, காயமடைந்த அவரை காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின்பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து மாரியப்பனைத் தேடிவருகின்றனா்.