தூத்துக்குடி கல்லூரியில் பரிசோதனை முகாம்

அகா்வால் கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் ஆசிரியா், பணியாளா்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாமை வியாழக்கிழமை நடத்தின.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவை சங்கம், பி வெல் மருத்துவமனை, அகா்வால் கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் ஆசிரியா், பணியாளா்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாமை வியாழக்கிழமை நடத்தின.

முகாமை கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு தொடக்கிவைத்தாா். ரத்தத்தில் சக்கரை அளவு, ரத்த அழுத்தம், கண், பல், செவித்திறன் குறித்த பரிசோதனைகள் செய்யப்பட்டன. 160 ஆசிரிய, ஆசிரியரல்லாத பணியாளா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா்களான பேராசிரியா்கள் ஸ்டீபன் பிச்சைமணி, எஸ். முத்துசாமி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com