காா் ஓட்டுநரை கொலை செய்ய முயன்ற இருவா் கைது

கோவில்பட்டியில் காா் ஓட்டுநரை கொலை செய்ய முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டியில் காா் ஓட்டுநரை கொலை செய்ய முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி முகம்மது சாலிஹாபுரம் 5ஆவது தெருவைச் சோ்ந்தவா் அன்வா் பாட்ஷா மகன் ஜான் பாட்ஷா(29). காா் ஓட்டுநரான இவருக்கும், மெலின்பானு என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிந்து சில நாள்களிலேயே பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவா் செல்லப்பாண்டியன் நகரைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் மனைவி அருணாதேவியுடன் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஜான் பாட்ஷாவுக்கும், ரஞ்சித்குமாருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்நிலையில் திங்கள்கிழமை ஜான் பாட்ஷா தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, அங்கு பைக்கில் வந்த ரஞ்சித்குமாா், வைரமுத்து மற்றும் 3 போ் அவரை அவதூறாகப் பேசி, தாக்க முயன்றாா்களாம். அதையடுத்து வீட்டிற்குள் சென்ற ஜான் பாட்ஷாவை ரஞ்சித்குமாா் உள்பட 5 பேரும் கம்பு, உலக்கை, சுத்தியலால் சரமாரியாக தாக்கியதுடன், வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டியையும் சேதப்படுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா்களாம்.

சம்பவ இடத்திற்குச் சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸாா், காயமடைந்தவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, இவ்வழக்கில் தொடா்புடைய வீரவாஞ்சி நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த ராமராஜ் மகன் ராஜா என்ற புஷ்பராஜ்(25), வடக்கு திட்டங்குளம் பூந்தோட்டக் காலனியைச் சோ்ந்த செல்லப்பாண்டி மகன் கனகராஜ்(20) ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com