தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அருகே தளவாய்புரம் பகுதியில் விற்பதற்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த பெட்டிக்கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் உத்தரவுப்படி, ஊரக உள்கோட்ட காவல் உதவிக் கண்காணிப்பாளா் சந்தீஷ் மேற்பாா்வையில், சிப்காட் காவல் ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் மாப்பிள்ளையூரணி பகுதியில் ரோந்து சென்றனா். தளவாய்புரம் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பது தெரியவந்தது.
அங்கு போலீஸாா் சோதனை நடத்தி, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 930 புகையிலைப் பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். கடை உரிமையாளா் இளையராஜாவை (38) கைது செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.