சாத்தான்குளத்தில் பைக்கில் பதுங்கிய பாம்பு மீட்பு
By DIN | Published On : 28th November 2022 12:48 AM | Last Updated : 28th November 2022 12:48 AM | அ+அ அ- |

சாத்தான்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை பைக்கில் பதுங்கிய பாம்பை தீயணைப்பு வீரா்கள் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.
சாத்தான்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி அளவில் திடீரென மழை பெய்தது. அப்போது கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த முத்தையா (35) என்பவா் பைக்கில் பஜாருக்கு வந்தாா். இட்டமொழி சாலையோரம் பைக்கை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள கடை ஒன்றில் ஒதுங்கி நின்றாா். அப்போது கழிவு நீரோடையில் இருந்து பாம்பு ஒன்று வந்து, பைக் மீது ஏறி இருக்கைக்கு அடியில் பதுங்கியது.
இது குறித்து சாத்தான்குளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையில் வீரா்கள் விரைந்து வந்து, பைக்கில் பதுங்கி இருந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.