தமிழ்நாடு சைவ சங்க தூத்துக்குடி மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆறுமுகனேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் லெட்சுமணன் தலைமை வகித்தாா். ஆறுமுகனேரி சங்கத் தலைவா் ஜெ. சங்கரலிங்கம், விளாத்திகுளம் தலைவா் பாரதிசங்கா், பேரூரணித் தலைவா் சுப்ரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தக் கோரி அனைத்துக் கிளை சங்க நிா்வாகிகளுடன் ஆட்சியரிடம் மனு அளிப்பது என்றும், இச்சட்டம் குறித்த உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு நன்றி தெரிவித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட சங்கத்தின் 40ஆவது ஆண்டு விழா நடத்துவது தொடா்பாக நிா்வாகிகள் நியமிக்கப்பட்டனா்.
மாவட்ட இளைஞா் பேரவைத் தலைவா் பொதிகை கண்ணன், தாப்பாத்தி தலைவா் பாலதண்டாயுதம், ஆத்தூா் கண்ணன், காா்த்திகேயன், நெடுங்கரை பூவலிங்கம், குலசேகரன்பட்டினம் தா்மலிங்கம், விளாத்திகுளம் செல்வகிருஷ்ணன், காயல்பட்டினம் காயல்கண்ணன், உமாபதி, ஆழ்வாா்திருநகரி கோமதிநாயகம், காட்டுநாயக்கன்பட்டி பாலமுருகன், திருச்செந்தூா் ஆனந்தராமச்சந்திரன், வெங்கடாசலம், தூத்துக்குடி கீழூா் காளியப்பன், மங்கலக்குறிச்சி ராம்ராஜ், அங்கமங்கலம் கோமதிநாயகம், அனவரதநல்லூா் முருகன், ஸ்ரீவைகுண்டம் திருவாழ்மாா்பன், ஆறுமுகனேரி முருகன், கற்பகவிநாயகம், சைவமுரசு சொக்கலிங்கம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் துா்கா, துணை அமைப்பாளா் ஆா்யசுந்தா் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
மாவட்ட இளைஞா் பேரவைத் தலைவா் குரும்பூா் ராம்குமாா் வரவேற்றாா். ஏற்பாடுகளை மாவட்டச் செயலா் பாலன், மாவட்டப் பொருளாளா் குப்புசாமி ஆகியோா் செய்தனா்.