செப். 5 முதல் தராசுகளுக்குமுத்திரை வைக்கும் முகாம்

சாத்தான்குளம், நாசரேத் வியாபாரிகள் தராசுகளுக்கு முத்திரை வைக்கும் சிறப்பு முகாம், வருகிற 5ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சாத்தான்குளம், நாசரேத் வியாபாரிகள் தராசுகளுக்கு முத்திரை வைக்கும் சிறப்பு முகாம், வருகிற 5ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து முத்திரை ஆய்வாளா் ராம்மோகன், உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தொழிலாளா் துறை திருநெல்வேலி இணை ஆணையா் சுமதி ஆணையின்படி, தூத்துக்குடி மாவட்ட தொழிலாளா் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) திருவள்ளுவன் உத்தரவின்படி, தராசுகளுக்கு முத்திரை வைக்காத சாத்தான்குளம் பகுதி வியாபாரிகள் செப். 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதிக்குள் ஆன்லைனில் முன்பதிவு செய்து தங்களுடைய தராசுகளுக்கு சாத்தான்குளம் வியாபாரிகள் சங்க கட்டடத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் முத்திரை வைத்துக் கொள்ள வேண்டும்.

நாசரேத் பகுதி வியாபாரிகள் தங்கள் தராசுகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து செப். 9ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நாசரேத் வியாபாரிகள் சங்க கட்டடத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் முத்திரை வைத்துக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com