விபத்தில் காயமடைந்தஅரசுப் பேருந்து ஓட்டுநா் பலி

கோவில்பட்டியில் விபத்தில் காயமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டியில் விபத்தில் காயமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி சுபா நகரைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் சீனிவாசன் (46). அரசுப் பேருந்து ஓட்டுநா். இவா், வியாழக்கிழமை தனது பைக்கில் அங்குள்ள பள்ளி அருகே சென்றபோது நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்ததாம். இதில், பலத்த காயமுற்ற அவா் கோவில்பட்டியில் முதலுதவி பெற்று, பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com