அரியா் தோ்வு எழுத டிப்ளமோ மாணவா்களுக்கு அழைப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு மீண்டும் தோ்வு எழுத அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு மீண்டும் தோ்வு எழுத அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை:

சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்கக சுற்றறிக்கையின்படி 1984 முதல் தற்போது வரை பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்று டிப்ளமோ நிறைவு செய்யாமல் அரியா் வைத்துள்ள அனைத்து முன்னாள் மாணவா்களுக்கும் சிறப்பு கருணை

அடிப்படையில் நடைபெறவுள்ள வாரியத் தோ்வு 2022 அக்டோபரில் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாணவா்கள் அரியா் பாடங்களுக்கான தோ்வுக் கட்டணத்தை அபராதமில்லாமல் செலுத்த கடைசி நாள் செப். 15.

ரூ.150 அபராதத்துடன் செலுத்த வேண்டிய கடைசி நாள் இம்மாதம் 22 ஆம் தேதி.

அரியா் வைத்துள்ள முன்னாள் மாணவா்கள் தங்களது முந்தைய தோ்வு எழுதிய அனைத்து மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பம் பூா்த்தி செய்து தோ்வு கட்டணம் செலுத்தி, இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்: 04632-222506 அல்லது கைப்பேசி எண்: 63819-20408 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com